களுவாஞ்சிகுடியை சேர்ந்த சுரேஸ் தட்சயன் நான்கு வயசு எனும் குழந்தையே இவ் விபத்து சம்பவத்தில் உயிரிழந்துள்ளது.
தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டு இருக்கும் பேதே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது
களுவாஞ்சிகுடியில் இருந்து களுதாவளையை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை திடிரென துவிச்சக்கர வண்டியொன்று குறுக்கே பாய்ந்துள்ளது. இதனையடுத்து மோட்டார் சைக்கிளை நிறுத்த எத்தணித்த வேளை சைக்கிளில் இருந்த குழந்தை கீழே தவறிவிழுந்துள்ளது.
பின்னர் களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைளுக்கா மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்
0 Comments:
Post a Comment