22 Jul 2016

மாவடிக் கந்தனின் ஆடிவேல்விழா தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவு

SHARE

கிழக்கிலங்கை வரலாற்றுப் புகழ்மிக்க காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த ஆடிவேல் விழாவின் இறுதிநாள் தீர்த்தோற்சவமானது இன்று 21ம் திகதி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகுசிறப்பாக நடைபெற்றது.

கடந்த 06.07.2016ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மாவடிக் கந்தனின் ஆடிவேல் விழாவானது இன்று 21ம் திகதி ஆலயத்திலிருந்து ஆரம்பமான ரதபவனி மற்றும் காவடிகள் ஊர்வலமாக சமுத்திரக்கரையை அடைந்ததும் தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவடைந்தது.







SHARE

Author: verified_user

0 Comments: