12 Jul 2016

மட்.களுதாவளை மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற ஆய்வுகூடத் திறப்பு விழா

SHARE
மட்.களுதாவளை மகா வித்தியாலயத்தில் செவ்வாய்க் கிழமை (12) காலை நடைபெற்றது. இந்த ஆய்வுகூடத் திறப்பு விழா நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான
ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர் இ.பிரசன்னா, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெத்தினம், மா.நடராசா பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பார் ந.புள்ளநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்,

இதன்போது அதிதிகள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டு, ஆய்வு கூடம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டதுடன், மாணவர்கள் கணணி வேலைகளில் ஈடுபட்டதனையும், அங்கு நடைபெற்ற வீதி நாடக சிறப்புக் காட்சியையும் அவதானித்தனர்.











SHARE

Author: verified_user

0 Comments: