24 Jul 2016

மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையால் நகர நெடுஞ்சாலை மின் விளக்குகளுக்கான மின் துண்டிப்பு நகரம் இருளில் மட்டக்களப்பு காத்தான்குடி நகர கடைத் தெரு சனிக்கிழமை இரவு இருளில் மூழ்கியது.

SHARE

(எச்..ஹுஸைன்) 


காத்தான்குடி பிரதான வீதியில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகளுக்கான மின விநியோகத்தை இலங்கை மின்சார சபை துண்டித்ததால் இந்நிலைமை ஏற்பட்டது.
கடந்த மூன்று மாதங்களுக்கு இலங்கை மின்சார சபைக்குச் செலுத்த வேண்டிய மின் பாவனைக் கட்டணமான சுமார் 650,000 ரூபா நிலுவையினை காத்தான்குடி நகர சபை செலுத்தத் தவறியதால் இந்த நடவடிக்கையினை மட்டக்களப்பு கல்லடி மின்சார சபை மேற்கொண்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதான வீதி மின் விளக்குகளுக்கு மூன்று இணைப்புக்கள் மூலம் மின்சாரம் வழங்கப்படுகிறது. இதில் பிரதான இரு இணைப்புகளுக்குமான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மிகுதி இணைப்புக்கான மின் பாவனைக் கட்டணமாக சுமார் 150.000 ரூபா நிலுவையில் உள்ளது.

இதனையும் காத்தான்குடி நகரசபை செலுத்த தவறும் பட்சத்தில் எதிர்வரும் நாட்களில் அவற்றுக்கான மின் விநியோகமும்துண்டிக்கப்படும் என அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் இரவு வேளையில்தான் அதிகமாக வியாபரங்கள் இடம்பெறுவது வழக்கம்.
பிரதான வீதி இருளில் மூழ்கியுள்ளதால் வியாபார நடவடிக்கைகள் பாதிப்படையும் வாய்ப்புள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.



SHARE

Author: verified_user

0 Comments: