1 Jun 2016

சர்வதேச புகைத்தல்- மது எதிர்ப்பு தினம்

SHARE
சர்வதேச புகைத்தல்- மது எதிர்ப்பு தினம் இன்றையதினம் (06.01.2016) வாழ்வின் அபிவிருத்தி திணைக்களம்இ சமூக வலுவூட்டல்கள் மற்றும், நலனோம்புகை அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டது.
இப்  பேரணியானது  எருவில் சமூர்த்தி வங்கிக்கு முன்னால் ஆரம்பமாகி  களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தை வந்தடைந்ததுடன்,  அங்கு புகைத்தல், மற்றும் மது ஒழிப்பு பற்றிய அறிவுறுத்தல் கூட்டமும் இடம்பெற்றது. 

இந் நிகழ்வானது எருவில் சமூர்த்தி வங்கி முகாமையாளர் பா. பத்மநாதன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றதுடன். இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக ம.தெ.எ.பற்று பிரதேச செயலாளர் எம். கோலரெத்தினம் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

இப்பேரணிக்கு எருவில் கண்ணகி மகாவித்தியாலய மாணவர்கள், வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர்கள்,  பிரதேச செயலக அதிகாரிகள்,  பொதுமக்கள் என்போர் கலந்து சிறப்பித்தனர்.











SHARE

Author: verified_user

0 Comments: