26 May 2016

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த நீர் வழங்கல் நிலையமாக மட்டக்களப்பு அலுவலகம் தெரிவு

SHARE
தேசியநீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் அலுவலகத்தின் கீழ் அமைந்துள்ள பத்து நீர் வழங்கல் அலுவலகங்களுகிடையே இடம்பெற்ற 2016 ஆம் ஆண்டிற்கான சிறந்த நீர் வழங்கல் அலுவக தெரிவில் முதலாம் இடத்தை  மட்டக்களப்பு நீர் வழங்கல் அலுவலகமும், இரண்டாம் இடத்தை செங்கலடி நீர் வழங்கல் அலுவலகமும், மூன்றாம் இடத்தை  கல்லாறு நீர் வழங்கல் அலுவலகமும், பெற்றுக் கொண்டுள்ளன. 
இத்தெரிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் மூன்று இடங்களையும் பெற்றுக் கொண்டநீர் வழங்கல் அலுவகங்களின் பொறுப்பதிகாரிகளுக்கான சான்றிதழும் நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டுள்ளன..

அந்த வகையில் முதலாம் இடத்தைப்பெற்றறுக்கொண்ட மட்டக்களப்பு நீர்வழங்கல் அலுவலககத்தின் நிலைய பொறுப்பதிகாரி ரீ.கிருபாகரனுக்கும், இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட கல்லாறு நீர் வழங்கல் அலுவலகத்தின் நிலைய பொறுப்பதிகாரி ஏ.அருள்பிரகாஷத்திற்கும், மூன்றாம் இடத்தைப் பெற்ற செங்கலடிநீர் வழங்கல் அலுவலகத்தின் நிலையப்பொறுப்பதிகாரி, எம்.விக்னேஸ்வரன், ஆகியோருக்கு தேசியநீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கிழக்குப் பிராந்திய உதவிபொது முகாமையாளர் என்.சுதேசன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் டி.ஏ.பிரகாஷ் ஆகியோரால் கிழக்கு பிராந்திய பிரதிபொது முகாமையாளர் பொறியியலாளர் எஸ்.எ.றசீட் தலைமையில் கடந்த 2016.05.18 அன்று அம்பாரை மாவட்ட செயலக உப அலுவலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றநிகழ்வின் போது வழங்கிவைக்கப் பட்டமை குறிப்பிடத் தக்கதாகும். 


SHARE

Author: verified_user

0 Comments: