மட்டக்களப்பு இந்து மகளிர் மன்றத்தின் மாணவர் பரிசளிப்பு வைபவம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00மணியளவில் இந்து மகளீர் மன்ற மண்டபத்தில் இந்து மகளீர் மன்றத்தலைவி திருமதி மனோஹரி தலைமையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று கல்வி கோட்டத்தில் நடாத்தப்பட்ட விசேட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றீதழ்களும்,கேடயங்களும் இவ்வைபவத்தில் அதிதிகளினால் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் ஆத்மீக அதியாக கல்லடி இராமகிருஸ்ண மிசன் சுவாமி பிரபு பிரேமானந்தாஜீ, ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர்,மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவகத்தின் பிரதிக்கல் விப்பணிப்பாளர் பொன்.வன்னியசிங்கம், கல்குடா கல்வி வலயத்தின் முன்னாள் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி. பரமேஸ்வரி இளங்கோ கல்லடி விவேகானந்தா மகளிர் பாடசாலையின் முதல்வர் திருமதி. திலகவதி ஹரிதாஸ் ஆகியோர்களுடன் மாணவர்கள்,பெற்றோர்கள்,கலந்து கொண்டனர்.
இதன்போது இறைவணக்கம்,பஞ்ச புராணம் ஓதல், ஆசியுரை, திருக்குறள் மனனம், பஞ்சபுராணம் ஓதல்போட்டி, போன்றபோட்டிகளில் வெற்றி பெற்று முதனிலைப் படுத்தப்பட்டவர்களுக்கு பரிசளிப்புக்கள் இடம்பெற்றது.
அதிபர் திருமதி. திலகவதி ஹரிதாஸ் அவர்களின் மனிதபிமான, மகத்தான எண்ணத்தில் மூலம் இந்து மகளீர் மன்றத்தின் பாடசாலைக்கு மின்விசிறி இதன்போது வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது 50 மாணவர்களுக்கு பரிசளிப்புக்கள் இடம்பெற்றது.
0 Comments:
Post a Comment