10 Jan 2024

வெள்ளத்தில் மூழ்கும் மரக்கறிச் செய்கை.

SHARE

வெள்ளத்தில் மூழ்கும் மரக்கறிச் செய்கை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது தொடற்சியாக பெய்துவரும் பலத்த  அடைமழைகாரமாக மாவட்டத்தில் செய்கைபண்ணப்பட்டிருந்த மேட்டுநிலப் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் உட்புகுந்துள்ளதனால் மக்கள் இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மேட்டுநிலப் பயிற்செய்கைக்குப் பெயர்போன களுதாவளைதேத்தாதீவுமாங்காடுசெட்டிபாளையம்குருக்கள்மடம்களுவாஞ்சிகுடிஉள்ளிட்ட பல கிராமங்களிலும் செய்கை பண்ணப்பட்டிருந்த மிளகாய்கத்தரிமரவள்ளிவெங்காயம்தக்காளி உள்ளிட்ட மேட்டுநிலப் பயிர்களும்தோட்டங்களும்வெள்ளத்தில் அள்ளுண்டுள்ளதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும்இனதால் தாம் மிகுந்த இன்னல்களையும் எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

மரக்கறித் தோட்டங்களில் இவ்வாறு வெள்ளநீர் தேங்கியுள்ளதனால் வழிந்தோடுவதற்கு முடியாத இந்நலையில் அப்பகுதி விவசாயிகள் ஒன்றிணைந்து நீரை வெட்டி கலுக்கு அனுப்புவதற்குரிய முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் முறையான வடிவான் வசதிகளை சம்மந்தபபட்ட அதிகாரிகள் ஏற்படுத்தித் தரப்படும் பட்சத்தில தாம் இவ்வாறு வருடாந்தம் ஏற்படும் வெள்ள அனர்த்ததிலிருந்து தமது பயிர்களையும்தோட்டங்களையும் பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


 
















SHARE

Author: verified_user

0 Comments: