செவ்வாய்க்கிழமை மாலை 13.11.2018 மட்டக்களப்பு – ஏறாவூர் நகர பிரதேசத்தில் ஆங்காங்கே பட்டாசு கொளுத்தி ஆரவாரம் செய்யப்பட்டன.
நாடாளுமன்றத்தைக் கலைத்தமை தொடர்பான ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக, உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்ததை அறிந்த பின்னரே ஆதரவாளர்களால் இவ்விதம் பட்டாசு கொளுத்தி ஆரவாரம் செய்யப்பட்டன.
நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பான விசாரணைகளின் தீர்ப்பு பிரதம நீதியரசர் உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமால், செவ்வாய்க்கிழமை மாலை வழங்கப்பட்டது
இந்த இடைக்காலத் தடையுத்தரவு, எதிர்வரும் டிசெம்பெர் மாதம் 07ஆம் திகதி வரை, நீடிக்குமெனவும் கூடவே, ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலும் இரத்துச் செய்யப்படுமெனவும், பிரதம நீதியரசர் உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் தீர்ப்பு வழங்கியது.
0 Comments:
Post a Comment