1 Jan 2017

புதுவருடப் பிறப்புக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சிறுவன் மரணம்

SHARE
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தளவாய்க் கிராமத்தில் புத்தாண்டுப் பிறப்புக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறுவன்
திடீரென விழுந்து மரணித்து விட்ட சம்பவம்பற்றி தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். 

ஏறாவூர், புன்னைக்குடா வீதி, தளவாய் கிராமத்தைச் சேர்ந்த தயாகரன் மதுஷான் (வயது 11) என்ற சிறுவனே ஞாயிறு (01.01.2017) அதிகாலை மர்மமாக மரணித்துள்ளான்.

 
இதுபற்றி சிறுவனின் தந்தை சிவலிங்கம் தயாகரன் (வயது 34) தெரிவிக்கையில் தான் புன்னைக்குடாவில் ஆழ் கடல் தொழிலுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த வேளையில் ஞாயிறு அதிகாலை 5.30 மணியளவில் மனைவியிடமிருந்து மகன் திடீரென விழுந்து மரணித்து விட்டதாக செய்தி கிடைத்தது. ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு மகன் கொண்டு செல்லப்பட்டபோதும் ஏற்கெனவே அவரது உயிர் பிரிந்pது விட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். 


புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது எமது வீட்டு வளவில் அமைக்கப்பட்டுள்ள புதிய தேவாயலத்தில் நடந்த புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது அவர் சனிக்கிழமை இரவிலிருந்து ஞாயிறு அதிகாலை வரை ஈடுபட்டிருந்ததாகவும் அவ்வேளையிலேயே திடீரென விழுந்து மரணித்து விட்டதாகவும் மனைவியிடமிருந்து அறியக் கிடைத்தது என்றார். 



இச்சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். 
பிரேத பரிசோதனைக்காக சிறுவனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.







SHARE

Author: verified_user

0 Comments: