8 Feb 2024

நெல் கொள்வனவில் ஈடுபட்டுவரும் வியாபாரிகளின் தராசுள் திடீர் பரிசோதனை 8 வியாபாரிகளின் தராசுகளை கைப்பற்றி வழக்குப் பதிவு.

SHARE

நெல் கொள்வனவில் ஈடுபட்டுவரும் வியாபாரிகளின் தராசுள் திடீர் பரிசோதனை 8 வியாபாரிகளின் தராசுகளை கைப்பற்றி வழக்குப் பதிவு.

மட்டக்களப்பில் விவசாயிகளிடம் சட்டவிரோத தராசுகள் மூலம் நெல் கொள்வனவில் ஈடுபட்டுவரும் வியாபாரிகளின் தராசுகளை அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் புதன்கிழமை (07.02.2024) மாலை தேடி முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது சட்டவிரேத தராசு மூலம் மோசடியாக நெல் கொள்வனவு செய்துவந்த 8 வியாபாரிகளின் தராசுகள் கைப்பற்றியதுடன் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அளவீட்டு திணைக்களத்தின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான பணிப்பாளர் வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில்  தற்போது வேளாணமை அறுவடை இடம்பெற்றுவரும் நிலையில் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்துவரும் வெளிமாவட்ட வியாபாரிகள் தராசுகள் மூலம் மோசடி செய்து விவசாயிகளிடம் நெல்லை கொள்வனவு செய்துவருவதாக விவசாயிகள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி முரளிதரனின்  கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இந்த நிலையில் வயல்பகுதிகளில் நெல் கொள்வனவில் ஈடுபட்டுவரும் வியாபாரிகளின் தராசுகளை பரிசோதனை செய்யமாறு அரசாங்க அதிபர் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்கள பணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து மாவட்ட பணிப்பாளர் வி.விக்கினேஸ்வரன் தலைமையில் பரிசோதனை உத்தியோகத்தர்களான எம்.கிருஷணானந்தன், எம்.ஆர்.எம்.றைஸ்கான் உள்ளிட்ட அதிகரிகள் செங்கலடி பிரதேசத்திலுள்ள வயல் பகுதிகளில் லொறிகளில் நெல் கொள்வனவு செய்துவரும் வியாபரிகளை தேடி  முற்றுகையிட்டு அவர்களின் தராசுகளை பரிசோதனை செய்தனர்.

இதில் அரச அனுமதியற்ற 5 தராசுகளும் அளவையில் மோசடி செய்யப்பட்ட 3 தராசுகளும், உள்ளடங்கலாக 8 தராசுகள் கைப்பற்றியதுடன் 8 வியாபரிகளுக்கு எதிராக  நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்படட தராசுகளையும் உத்தியோகஸ்த்தர் குழு எடுத்துச் சென்றுள்ளது.

இந்த முற்றுகையில் கைப்பற்றி கொண்டுவரப்பட்ட தராசுகளை  அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்திற்கு அரசாங்க அதிபர்  நேரடியாக சென்று பார்வையிட்டதுடன் தொடர்ந்தும் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அவர்களுக்கு பணித்துள்ளதாக அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.





















SHARE

Author: verified_user

0 Comments: