27 Mar 2023

பூர்வீக முஸ்லிம் பிரதேசத்திற்குள் வரும் புன்னைக்குடா வீதி எனும் பொதுப் பெயரை சிங்களப் பெயராக மாற்ற ஆளுநர் உத்தரவு.

SHARE

(.எச்.ஹுஸைன்)

பூர்வீக முஸ்லிம் பிரதேசத்திற்குள் வரும் புன்னைக்குடா வீதி எனும் பொதுப் பெயரை  சிங்களப் பெயராக மாற்ற ஆளுநர் உத்தரவு.

இதனைக் கண்டிப்பதோடு உடன் நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவிப்பு 

தொன்று தொட்டுஏறாவூர் புன்னைக்குடா வீதிஎன புழக்கத்திலிருந்து வரும் புன்னைக்குடா வீதியின் பெயரைஎல்விஸ் வல்கமவீதி என சிங்களப் பெயராக மாற்றுவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் உத்தரவிட்டுள்ளது பிரதேசத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஆளுநரின் உத்தரவு வெளியானதை அடுத்து ஏற்கெனவே ஏறாவூர் நகரை ஊடறுத்துச் செல்லும் கொழும்புமட்டக்களப்பு நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும்  அறிவித்தலாக அமைக்கப்பட்டிருந்த புன்னைக்குடா வீதி என்ற பெயர்ப் பலகை அகற்றப்பட்டிருக்கிறது. 

இந்த அறிவித்தல் வெளியாகி ஏறாவூரில் பதற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய சுற்றாடல்துறை அமைச்சருமான நஸீர் அஹமட் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் பாரம்பரியமாக புன்னைக்குடா வீதி என இருந்து வரும் பெயர் மாற்றம்பெறாது. பெயர் மாற்ற செயற்பாடுகளை உடன் நிறுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திடீர் பெயர்மாற்ற செயற்பாடானது கண்டிக்கத்தக்கதோடு ஆளுநரின் அதிகார எல்லையை மீறும் செயற்பாடாகும். இவ்வாறான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதை ஆளுநர்  உடனடியாக நிறுத்த வேண்டும்.” என்று தெரிவித்திருந்தார்.

கொழும்புமட்டக்களப்பு நெடுஞ்சாலையில் ஏறாவூர் நகரிலிருந்து சுமார் 5.23 கிலோமீற்றர் தூரத்தில் புன்னைக்குடாக் கடல் அமைந்திருக்கிறது. இது வங்காளக் கடல் பகுதியாகும். ஆங்கிலேயர் காலத்திற்கு முன்பிருந்தே பூர்வீகமாக இந்த வீதி புன்னைக்குடா வீதி என்றே அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. புன்னை மரங்கள் அங்கு அதிகமிருந்ததால் இது காரணப் பெயராகியுள்ளது.

ஏறாவூர் நகர பிரதேசம் நூறு சத வீதம் முஸ்லிம் சமூகத்தைக் கொண்டமைந்திருந்தபோதும் கூட அந்த வீதிக்கு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த எவரினதும் பெயரைச் சூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால், திடீரென தென்பகுதி காலிப் பிரதேச  சிங்கள சமூகத்தைச் சேர்ந்த 9 பேர் ஆளுநருக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளனர். அதில் ஏறாவூர் புன்னைக்குடா வீதிக்குஎல்விஸ் வல்கமஎன பெயரை மாற்றுமாறு கோரியுள்ளனர்.

அந்த வேண்டுகோளை உடனடியாக அமுல்படுத்தும் நடவடிக்கையில் ஆளுநர் இறங்கி உத்தரவையும் பிறப்பித்துள்ளார்.

காலியைச் சேர்ந்த சிங்கள சமூகத்தவர் அந்த 9 பேரும்  விடுத்துள்ள வேண்டுகோளில்காலி  தல்பே கிராமத்தில் பிறந்து தனது 12வது வயதில் ஏறாவூருக்குப் போய்ச் சேர்ந்து அங்கே வர்த்தகம் செய்து நிலபுலன்களையும் வாங்கியதுடன் இன்னும் பல சேவைகளைச் செய்தஎல்விஸ் வல்கமஅவர் காலியின் பெருமைக்குரிய புதல்வனாகும். எனவே அவரது பெயரை ஏறாவூர் புன்னைக்குடா வீதிக்குச் சூட்ட உடன் நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரைக் கேட்டுக் கொள்கிறோம் என்று எழுதப்பட்டுள்ளது.

 ஆளுநர் ஏற்கெனவே ஏறாவூர் பொதுச் சந்தையைஏறாவூர் சிங்களச் சந்தைஎனக் குறிப்பிட்டு ஏறாவூர் நகர சபைக்கு கடிதம் அனுப்பியிருந்ததும் அது ஆளுநரது உத்தியோக பூர்வ வலைத் தளத்தில் வெளியாகி பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியவுடன் ஆளுநர் அந்த வார்த்தைப் பிரயோகத்தை மாற்றிக் கொண்டதும் இங்கு குறிப்பிடத் தக்கது.

மேலும் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத மாகாண சபை நிருவாகக் காலத்திலும் உள்ளுராட்சி மன்ற நிருவாகம் கலைக்கப்பட்டிருக்கும் தறுவாயிலும் சந்தர்ப்பத்தைப் பார்த்து  கிழக்கு மாகாண ஆளுநரின் நடவடிக்கைககள் முற்றுமுழுவதுமாக சிங்கள பேரினவாத அமுல்படுத்தலை யைமப்படுத்தியதாக இடம்பெற்று வருவதாக அதிருப்தி தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னர் கிழக்கு மாகாண ஆளுநர்களாக படை அதிகாரிகள் மற்றும் சிங்கள சமூகத்தைச் சேர்ந்தோரே நியமிக்கப்ட்டிருந்தபோதும் தற்போதைய ஆளுநரைப் போன்று அவர்கள் நேரடியான சிங்கள மயமாக்கலை நோக்கி செயற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.











SHARE

Author: verified_user

0 Comments: