24 Dec 2022

மட்டக்களப்பில் நடைபெற்ற சாமஸ்ரீ சமூக சேவையாளர் விருது வழங்கும் நிகழ்வு - 2022

SHARE


மட்டக்களப்பில்
 நடைபெற்ற சாமஸ்ரீ சமூக சேவையாளர் விருது வழங்கும் நிகழ்வு - 2022.

அகில இன நல்லுறவு ஒன்றியம் நடாத்தும் சாமஸ்ரீ சமூக சேவையாளர் விருது விழா “வாழும்போதே வாழ்த்துவோம்எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.

கல்விகலைகலாசாரவர்த்தகசமூக நலத்துறைகளில் தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட புத்தி ஜீவிகளுக்கும்சாதனையாளர்களுக்குமான சாமஸ்ரீ சமூக சேவையாளர் விருது  வழங்கும் விழா இன்று (24) திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு  ஊறணி  ஹிரிபோஜன் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

அகில இன நல்லுறவு ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர்  கலாபூசணம்  யு.எல்.எம்ஹனிபா  தலைமையில்  இடம்பெற்ற நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கே.கருணாகரன் பிரதம  அதிதியாக கலந்து கொண்டு பல்துறை சாதனையாளர்களுக்கான விருதினை வழங்கி கௌரவித்தார்.

மேலும் இந்நிகழ்விற்கு கௌரவ அதிதிகளாக கலாநிநி   பொன்.நல்லரெத்தினம்மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி  வைத்தியர் .உதயகுமார் மற்றும் அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரியின் அதிபர் மா.சோமசூரியம் உள்ளிட்டோரும்சிறப்பு அதிதிகளாக காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்தியர் எம்.எஸ்.எம்.ஜாபிர்  மற்றும் அக்கரைப்பற்று  பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர்  கலாநிதி எஸ்.எம்.சதாத்அகில இலங்கை நல்லுறவு ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்டத்துக்குரிய இணைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்,

இதன்போது பல்துறைசார் சாதனையாளர்களுக்கு பொன்னாடை போர்த்திமாலை அணிவித்து "சாமஸ்ரீ தேச மானியவிருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன்பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகளுக்கும் இதன்போது நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.























SHARE

Author: verified_user

0 Comments: