1 Apr 2022

மூன்று பிள்ளைகளின் தாய் குத்திக் கொலை

SHARE

மூன்று பிள்ளைகளின் தாய் குத்திக் கொலை

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி கிராமத்தில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புதன்கிழமை மாலை 30.03.2022 இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் சவுக்கடி முருகன் கோயில் வீதியை அண்டி வசிக்கும் 38 வயதுடைய பெரியான் சிவரஞ்சனா என்பவரே மார்புப் பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கத்தியால் குத்தப்பட்டு இரத்தம் வழிந்தோடிய நிலையில் அவர் வீட்;டு வாசலில் வீழ்ந்து கிடந்துள்ளார்உறவினர்களால் சடலம் மீட்கப்பட்டு உடற்கூராய்வுப் பரிசோதனைகளுக்காக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரான பெண்ணின் கணவன் சிவரஞ்சன் தயாளகுமார் (வயது 40) தலைமறைவாகியுள்ள நிலையில் அவரைத் தேடும் பணியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சிவரஞ்சான அவரது கணவனால் ஏற்கெனவேயும் பலமுறை தாக்கப்பட்டுள்ளதாகவும் கொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் சிவரஞ்சனாவுக்கு தலையில் ஏற்பட்ட காயத்திற்கு 13 தையல் கட்டுக்கள் இடப்பட்டு குணமடைந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

குடும்ப வறுமை காரணமாக சிவரஞ்சனா 16 வருடங்களுக்கும் மேலாக அவ்வப்போது மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றே தனது குடும்பத்தையும் பிள்ளைகளையும் பராமரித்து வந்தவர் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.

கொலைச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.      

                                    

.






SHARE

Author: verified_user

0 Comments: