29 Dec 2021

மண்முனை மேற்கு பிரதேசத்தில் திட்டமுன்மொழிவுகள் தொடர்பாக ஆராயும் கூட்டம்.

SHARE

மண்முனை மேற்கு  பிரதேசத்தில் திட்டமுன்மொழிவுகள் தொடர்பாக ஆராயும் கூட்டம்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் உள்ளுராட்சி மன்றங்களின் வட்டாரங்களுக்கு எதிர்வரும் 2022 ஆம் ஆண்டில்  வழங்கப்படவுள்ள நிதிக்கான திட்டமுன்மொழிவுகள் தொடர்பாக ஆராயும் கூட்டம் திங்கட்கிழமை  (27)பிற்பகல் வவுணதீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது இப்பிரதேசத்திலுள்ள 10 வட்டாரங்களிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள உட்கட்டமைப்பு, வாழ்வாதாரம் உள்ளிட்ட திட்டங்களின் முன் மொழிவுகளை பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்கள், கிராம பிரதிநிததிகள் போன்றோர் இணைந்து திட்டங்களை ஆராய்ந்து சமர்ப்பித்தனர்.

ஒரு வட்டாரத்திற்கு 40 இலட்சம் ருபா ஒதுக்கீட்டில் மேற்படி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் படவுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுக் செயலாளர் பூ.பிரசாந்தன், மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் சண்முகராஜா, பிரதே செயலக திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





SHARE

Author: verified_user

0 Comments: