9 Nov 2021

மட்டக்களப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவு சீமெந்து பக்கற்றுகள் அதிகாரிகளால் மீட்பு-வர்த்தக நிலையங்களுக்கு சீல்.

SHARE

மட்டக்களப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவு சீமெந்து பக்கற்றுகள்  அதிகாரிகளால் மீட்பு-வர்த்தக நிலையங்களுக்கு சீல்.

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில்  சீமந்து மூட்டைகளை பதுக்கி வைத்திருந்து அதிக விலைக்கு விற்பணை செய்த சில வர்த்தக நிலைய நிலையங்களை திங்கட்கிழமை (08) மாலை முற்றுகையிட்ட நுகர்வோர் அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரிகள் சுமார் 800க்கு மேற்பட்ட சீமந்து மூட்டடைகளை மீட்டதுடன் இதனை பொறிக்கப்பட்ட விலைக்கு விற்பணை செய்தனர்.

நுகர்வோர் அதிகார சபையின் கிழக்கு மாகாண உதவி பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர்சதாத் தலைமையில் இந்த அதரடி முற்றுகை நடவடிக்கை இடம் பெற்றது.

இதன் போது சீமந்து மூட்டையில் பொறிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு சீமந்தை விற்பணை செய்த வரத்தக நிலையங்களுக்கு சென்ற நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் குழு அங்கு சீமந்து மூட்டைகளை மீட்டு அதில் பொறிக்கப்பட்ட விலைகளுக்கு அவ்விடத்திலேயே பொது மக்களுக்கு விற்பணை செய்தனர்.

இதன் போது சீமந்து விற்பணை செய்யும் வர்த்தக நிலையமொன்று சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டதுடன் அதிக விலைக்கு சீமந்து விற்பணை செய்த உரிமையாளர்கள் சிலருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் கிழக்கு மாகாண உதவி பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர்சதாத் தெரிவித்தார்.

சீமந்து மூட்டைகள் அதில் பொறிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பணை செய்தால் உடனடியாக நுகர்வோர் அதிகார சபைக்கு அறியத்தருமாறும் மேலும் அவர் தெரிவித்தார்.





SHARE

Author: verified_user

0 Comments: