26 Nov 2021

கிண்ணியா குறுஞ்சாங்கேணி படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபம்.

SHARE

கிண்ணியா குறுஞ்சாங்கேணி படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபம்.

கிண்ணியா குறுஞ்சாக்கேணி படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் காத்தான்குடியில் வெள்ளைக் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளதுடன் அனுதாபம் தெரிவிக்கும் பதாதைகளும் தொங்க விடப்பட்டுள்ளன.

காத்தான்குடி வர்த்தக சங்கத்தின் வேண்டுகோளின் பேரில் வெள்ளைக் கொடிகள் பறக்க விடப்பட்டு பதாதைகளும் தொங்க விடப்பட்டுள்ளன.

காத்தான்குடி குட்சின் சந்தியிலும் அனுதாபம் தெரிவிக்கும் பதாதை தொங்க விடப்பட்டுள்ளது.

கிண்ணியா குறுஞ்சாங்கேணி பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த எமது உறவுகளின் துயரத்தில் நாமும் பங்கேற்பதுடன் அந்த ஷஹீதுகளுக்காக உளமாற பிராத்திக்கின்றோம்.

அல்லாஹ் அந்த ஹீதுகளை பொருந்திக் கொள்வதோடு உறவுகளை இழந்து நிற்கும் உறவுகளுக்கு உள அமைதியினை வழங்குவானாக என தொங்க விடப்பட்டுள்ள பதாதையில் எழுதப்பட்டுள்ளன.

இதே போன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் அனுதாபம் தெரிவிக்கும் வகையில் வெள்ளைக் கொடிகள் பறக்க விடப்பட்டு பதாதைகளும் தொங்க விடப்பட்டுள்ளன




SHARE

Author: verified_user

0 Comments: