19 Oct 2021

கிழக்கில் மீலாத் விழாக் கொண்டாட்டங்கள்.

SHARE

கிழக்கில் மீலாத் விழாக் கொண்டாட்டங்கள்.

மட்டக்களப்பு காத்தான்குடி முஸ்லிம் முதியோர் இல்லத்துக்கு ஏறாவூர் சதகா பெண்டேசன் நிறுவனத்தினால் உலர் உணவுப் பொருட்கள் உடுதுணிகள் என்பன  திங்கட்கிழமை (18) மாலை வழங்கி வைக்கப்பட்டன.

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு இந்த உலர் உணவுப் பொருட்கள் உடுதுணிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதனை வழங்கி வைக்கும் வைபவம் காத்தான்குடி முஸ்லிம் முதியோர் இல்லத்தில் நடைபெற்றது.

ஏறாவூர் சதகா பெண்டேசன் நிறுவனத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற அதிபருமான எம்.எஸ்.அபுல்ஹசன் உலர் உணவுப் பொருட்கள் உடுதுணிகளையும் காத்தான்குடி முதியோ







ர் இல்லத்தின் தலைவர் ஓய்வு பெற்ற அதிபர் கே.எம்..அஸீஸிடம் கையளித்தார்.

இந்த நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதயசிறீதர், காத்தான்குடி பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்..ரி..நஜிமுதீன் உட்பட காத்தான்குடி முஸ்லிம் முதியோர் இல்ல நிருவாகிகள் ஏறாவூர் சதகா பெண்டேசன் நிறுவனத்தின் நிருவாகிகள் கலந்து கொண்டனர்.

இதன் போது பால்மா, அரிசி, சீனி, நூடில்ஸ், பழ வகைகள், மற்றும் உடுதுணிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.


SHARE

Author: verified_user

0 Comments: