23 Oct 2021

காராமுனையில் காணி அபகரிப்புக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்.

SHARE

காராமுனையில் காணி அபகரிப்புக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்.

மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காராமுனை எனும் இடத்தில் சிங்கள மக்களைத் திட்டமிட்டு குடியேற்றும் முயற்சிக்கு கண்டனம் மற்றும் எதிர்ப்புத் தெரிவித்து குறித்த இடத்திற்கு விரைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் தமிழ் முஸ்லிம் பொதுமக்கள் இணைந்து தமது கண்டனத்தைத் தெரிவித்து வியாழக்கிழமை (21) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவன், மற்றும் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள், தமிழ், மற்றும் முஸ்லிம் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது காராமுனை எமது பிரதேசம், இது மட்டக்களப்பு மண், எமது நிலம் எமக்கு வேண்டும், உள்ளிட்ட பல வசகங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.










SHARE

Author: verified_user

0 Comments: