25 Sept 2021

காத்தான்குடி பாலமுனை பிரதேசத்தில் பாரிய வாள் வெட்டு சம்பவம்- பாலமுனை இருவர் படு காயம்.

SHARE

காத்தான்குடி  பாலமுனை பிரதேசத்தில் பாரிய வாள் வெட்டு சம்பவம்- பாலமுனை இருவர் படு காயம்.

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பிரதேசத்தில் சனிக்கிழமை (25) அதிகாலை இடம் பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் பாலமுனை பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் படு காயமடைந்துள்ளனர். பாலமுனை பிரதான வீதியிலுள்ள சதாம் குறுக்கு வீதியில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

கத்திக்குத்துக்கு இலக்கான இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது இன்னுமொருவரினால் வழி மறிக்கப்பட்டு இருவருக்கிடையில் வாய்த்தகராறு இடம் பெற்று பின்னர் கத்திகுத்து இடம் பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் பாலமுனை முகைதீன் ஜும்ஆப்பள்ளிவாயல் வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஏ.எம்.பஸ்ர் என்பவரும் பாலமுனை ஆர்.டி.எஸ்.வீதியைச் சேர்ந்த எஸ்.சாகீர் என்பவரும் காயமடைந்துள்ளதாக தெரிய வருகின்றது. சம்பவ இடத்துக்கு சென்ற காத்தான்குடி பொலிசார் ஆரம்பக்க விசாரணைகளை மேற் கொண்டுள்ளதுடன் தொடர்ந்தும் விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.

இக் கத்திகுத்து சம்பவத்தை மேற் கொண்டதாக கூறப்படும் சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாகவும் குறித்த சந்தேக நபரை காத்தான்குடி பொலிசார் தேடி வருவதாகவும் காத்தானகுடி பொலிசார் தெரிவித்தனர்.











 

SHARE

Author: verified_user

0 Comments: