8 Sept 2021

தோணிகளுக்குள் மறைத்து வைத்திருந்த 70000 மில்லி லீற்றர், கசிப்புடன் இரு தோணிகளுடன் மட்டக்களப்பு வாவியில் இருவர் கைது! -நள்ளிரவில் வாவி சுற்றி வளைப்பு.

SHARE

தோணிகளுக்குள் மறைத்து வைத்திருந்த 70000 மில்லி லீற்றர், கசிப்புடன் இரு தோணிகளுடன் மட்டக்களப்பு வாவியில்  இருவர் கைது!

-நள்ளிரவில் வாவி சுற்றி வளைப்பு.சட்டவிரோதமான முறையில் ஊரட்ங்குச் சட்ட நேரத்தில் விற்பனை  செய்வதற்காக மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை வாவியினுள் தோணிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 70000 ஆயிரம் மில்லி வீற்றர் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து இரு தோணிகளும் மீட்கப் பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் பணிப்புரையின் பேரில் செவ்வாய்கிழமை(07) அதிகாலை 1.30 மணியளவில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது வாவியினுள் தோணிகளுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் கைது செய்யப்பட்ட நபர்களும் எறாவூர் நீதிமன்றத்தி ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.








                                                                                       

SHARE

Author: verified_user

0 Comments: