இரு வெவ்வேறு இடங்களில் துக்கில் தொங்கிய நிலையில் இருவரின் சடலங்கள் மீட்பு.
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் கிராத்தில் வீடு ஒன்றிலிருந்து சனிக்கிழமை(07) மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஓந்தச்சிமடம் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி வேலாயுதபிள்ளை என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டள்ளனர்.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின், வெல்லாவெளி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட களுமுந்தன்வெளி கிராமத்தில் துக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்றi மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்டவர் இரு பிள்ளைகளின் தந்தையான(28) வயதுடைய தருமரெத்தினம் தர்மதாஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நீண்டநாள் குடும்பதகராற்றில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டு முற்றத்தில் உள்ள மரத்திலிருந்தே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவான சம்பவ இடத்திற்குச் சென்ற அப்பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி உத்தரவிட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment