14 Aug 2021

கைக்குண்டுடன் களுவாஞ்சிகுடியில் வைத்துஒருவர் கைது.

SHARE

கைக்குண்டுடன் களுவாஞ்சிகுடியில் வைத்து ஒருவர் கைது.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பகுதியில் வைத்து கைகுண்டுடன் நபர் ஒருவர் கைது செய்யப்படுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை மாவட்டம் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 34 வயது மதிக்க தக்க இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை அக்கரைப்பற்றுப் பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வரும்வேளை வெள்ளிக்கிழமை (13) காலை 10.30 மணியளவில் விசேட அதிரடி படையினரால் பரிசோதனைக்கு உட்படுத்தபடுத்தியபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு கல்லடி கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து குறித்த கடற்கடையினர் விடையத்தை களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப் படையினருக்குத் தெரிவித்துள்ளனர். விரைந்து செயற்பட்ட விசேட அதிரடிப்படையினர், களுவாஞ்சிகுடி பிரதான வீதியால் சென்ற மோட்டார் சைக்கிள்களை பரிசோதித்துள்ளனர். இந்நிலையில் விசேட அதிரடிப்படையினர் பரிசோதிப்பதை அவதானித்த மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் திடீரென் திரும்பிச் சென்றுள்ளார். அவர் மீது சந்தேகம் கொண்ட விசேட அதிரடிப்படையினர் அவரைப் பின் தொடர்;ந்து ஓந்தாச்சிமடம் பகுதியில் வைத்து பிடித்து அவரை பரிசோதித்த போது அவரிடம் இவ்வாறு கைக்குண்டு இருப்பது தெரிவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து ஒரு கைகுண்டும் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றி களுவாஞ்சிகுடி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இவ்விடையம் தொடர்பில், மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த கைக்குண்டை செயலிழக்கச் செய்ய களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்று உத்தரவு வழங்கியுள்ளதாகவும், அதனை செயலிழக்கச் செய்ய தீர்மானித்துள்ளதாகவும், பொலிசார் மேலும் தெரிவித்தனர்.





SHARE

Author: verified_user

0 Comments: