1 Jun 2021

மட்டக்களப்பில் பயணக் கட்டுப்பாட்டை மீறிய 50 பேருக்கு பீ சீ.ஆர் பரிசோதனை.

SHARE

மட்டக்களப்பில் பயணக் கட்டுப்பாட்டை மீறிய 50 பேருக்கு பீ சீ.ஆர் பரிசோதனை.

தற்போது அமுலிலிருக்கும் பயணக் கட்டுப்பாட்டை மீறி வீதிகளில் நடமாடித் திரிந்தவர்களுககு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் திங்கட்கிழமை(31) பீசீ.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறு மட்டக்களப்பு காத்தான்குடி நகரில்   38 பேரிடமிருந்து பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டதுடன் 11 பேருக்கு அண்டிஜன் பரிசோதனைகள் இடம் பெற்றன.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.நபீலின் தலைமையில் காத்தான்குடி மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.பசீரின் மேற்பார்வையில் பொதுச் சுகாதார பரிசோதகர்களான ஏ.எல்.எம்.ரஹ்மத்துல்லாஹ், செனவிரத்ன, சகாதேவன் உட்பட சுகாதார அதிகாரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்;கான மாதிரிகளை பெற்றதுடன் அண்டிஜன் பரிசோதனையையும் மேற் கொண்டனர்.

காத்தான்குடி ஊர் வீதியில் இராணுவத்தினரின் பாதுகாப்புடன் இப் பரிசோதனை நடவடிக்கை இடம் பெற்றது.





 

SHARE

Author: verified_user

0 Comments: