25 Apr 2021

மட்டக்களப்பு நகரில் 100 பேரிடம் திடீர் அன்டிஜன் பரிசோதனை இருவருக்கு கொரோனா தொற்று உறுதி.

SHARE

மட்டக்களப்பு நகரில் 100 பேரிடம் திடீர் அன்டிஜன் பரிசோதனை இருவருக்கு கொரோனா தொற்று உறுதி.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதையடுத்து திடீர் அன்டிஜன் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவில்  சனிக்கிழமை(24) 100 பேரிடம் எழுந்தமானமாக திடீரென மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் ஈ.உதயகுமார் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு கல்லாறு கெரரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வரும் ஆசிரிய மாணவ பிள்ளைகளே இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் மேலும்  தெரிவித்தனர்.







SHARE

Author: verified_user

0 Comments: