மட்டக்களப்பு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பிலிருந்து இயங்கிவரும் கதிரவன் கலைக்கழகத்தின் 45 ஆண்டு நிறைவை முன்னிட்டு 45 நிகழ்வுகனை மேற்கொள்ளும் செயற்பாட்டின், 10 ஆவது நிகழ்வாக சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மண்முனை தென் மேற்கு (பட்டிப்பளை) பிரதேசத்திலுள்ள மருத்துவிச்சிமார் கௌரவம் வீடுவீடாகச் சென்று இடம்பெற்றது.
முதற்கட்டமாக முதலைக்குடா, அரசடித்தீவு, கற்சேனை, கடுக்காமுனை, அம்பிளாந்துறை கிராமங்களிலுள்ள மருத்துவிச்சிமார் இதன்போது கௌரவம் பெற்றனர்.
இந்நிகழ்வில், கிண்ணியா உதவிக்கல்விப் பணிப்பாளர் செ.சத்திதாஸ், அழ.யோகராசா, தங்க யுவன் ஆகியோரின் ஆதரவில் இந்நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் கதிரவன் தலைவர் கதிரவன் த.இன்பராசா, செயலாளர் கவிஞர் அழகு தனு, உபதலைவர் சோலையூரான் ஆ.தனுஸ்கரன், மாவட்ட இணைப்பாளர் பாலமீன்மடு இரா.கலைவேந்தன், ஆலோசகர் அ.குலேந்திரராசா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மருத்துவிச்சிமாரைக் கௌரவித்தனர்.
0 Comments:
Post a Comment