மட்டக்களப்பில் 41 கடற்படை வீரர்களுக்கு கொரோனாதொற்று--பொலிசார் வங்கி உத்தியோகத்தர்களுக்கும் பீசீஆர் பரிசோதனை.
மட்டக்களப்பில் 41 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்தனர்.
கல்லடி கடற்படை முகாமில் முகாமில் முதலில் ஏழுபேரிடம் மேற்கொண்ட பீசீஆர் பரிசோதனையில் மூவருக்கும் செவ்வாய்க்கிழமை 58 வீரர்களிடம் மேற்கொண்ட பீசீஆர் பரிசோதனையில் 39 வீரர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார தரப்பிபினர் மேலும் தெரிவித்தனர்.
இதன் காரணமாக மாவட்டத்தில் பல தரப்பினரிடத்திலும் தொடர்ந்தும் அன்டிஜன் மற்றும் பீசீஆர் பரிசோதனைகள் இடம் பெற்றுவருகின்றன.
மட்டக்களப்பில் கடமை புரியும 10 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பீசீஆர் பரிசோதனைகளும் 20 வங்கிகள மற்றும் நிதி நிறுவனங்களில் பணிபுரியும் உத்தியோகத்தர்களுக்கு அன்டிஜன் பரிசோதனைகளும் நேற்று மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி பணிமனையில் மேற்கொள்ளப்பட்டன.
0 Comments:
Post a Comment