களுதாவளை சங்கமம் பழைய மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு.
மட்.களுதாவளை மகாவித்தியாலயத்தின் “சங்கமம் பழைய மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் 2020 ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு களுதாவளை இராமகிருஷ்ண வித்தியாலய மண்டபத்தில் சனிக்கிழமை(27) நடைபெற்றது.
இதன்போது மேற்படி பரீட்சையில் சித்தி பெற்ற 21 மாணவர்கள் பதக்கம் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பாசாலைகளின் அதிபர்கள், மாணவர்கள் அமைப்பின் உறுப்பினர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மட்.களுதாவளை மகாவித்தியாலயத்தின் “சங்கமம் பழைய மாணவர் அமைப்பினர் இவ்வாறான நிகழ்வை தொடர்ச்சியாக 5 வருட காலமாக ஏற்பாடு செய்து நடாத்தி வருகின்றனர்
மேலும் இவ்வமைப்பினர் வருடாந்தம், க.பொ.சாதாரண தர மாணவர்களுக்கான முன்னோடி பரீட்சை பொருளாதார ரீதியில் நலிவுற்ற படுவாங்கரை பகுதி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்குதல், பாலர் பாடசாலை மாணவர்களுக்கு புத்தக பைகள் வழங்குதல், போன்ற கல்வி மற்றும் சமூக சேவைகளையும், மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment