73ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு மண்முனைப்பற்றில் மரநடுகை நிகழ்வு.
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மாவிலங்கைத்துறை கிராமசேவையாளர் பிரிவில் இலங்கையின் 73ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு மரநடுகை நிகழ்வு வியாழக்கிழமை(04) இடம்பெற்றது.
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் தலைமையில் மாவிலங்கைத்துறை பிள்ளையார் ஆலயமுன்றல் மற்றும் மாவிலங்கைத்துறை காளியம்பாள் ஆலய முன்றலில் நிழல்தரக்கூடிய மரங்களை நடப்பட்டன.
இந்தமரநடுகை நிகழ்வின்போது மாவிலங்கைத்துறை கிராமசேவையாளர் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆலய நிருவாகசைபையினர் பொதுமக்கள் பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள் உள்ளிட்ட பலருத் கலந்து கொண்டிருந்தனர்
0 Comments:
Post a Comment