4 Feb 2021

காத்தான்குடி வாவியில் 24 வயது இளைஞரைக் காணவில்லை.

SHARE

காத்தான்குடி வாவியில் 24 வயது இளைஞரைக் காணவில்லை.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்ட மஞ்சந்தொடுவாய் வாவியில் 24 வயது இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் வியாழக்கிழமை(4) மதியம் காணாமல் போயுளளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  தெரிவித்தார்.

மஞ்சந்தொடுவாய் குசைனியா பள்ளிவாயல் முனையிலுள்ள வாவியில் வலை கட்டுவதற்காகச் சென்ற குறித்த இளைஞர் படகோடு கட்டியிருந்த தோணி நீரில் அடித்துச் சென்றபோது அதனை தடுக்க நீரில் இறங்;கியபோதே நீர் ஓட்டம் அதிகமிருந்ததால் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது.

மஞ்சந்தொடுவாயைச் சேர்ந்த எம்.முனாஸ் என்ற 24 வயது இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காணாமல் போன இளைஞரைத் தேடும் பணிகள் தொடர்கின்றன. காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.










SHARE

Author: verified_user

0 Comments: