22 Feb 2021

சாரணிய இயக்கத்தின் தந்தை பேடன் பவளின் 164வது நினைவு தினம் மற்றும் மரநடுகை நிகழ்வு.

SHARE


சாரணிய இயக்கத்தின் தந்தை பேடன் பவளின் 164வது நினைவு தினம் மற்றும் மரநடுகை நிகழ்வு.

சாரணிய இயக்கத்தின் தந்தை பேடன் பவளின் 164வது நினைவு தினம் மற்றும் மரநடுகை நிகழ்வு திங்கட்கிழமை(22) மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில்  மட்டக்களப்பு நீரூற்றுப் பூங்காவில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கே.கருணாகரன் அவர்களினால் சாரணிய இயக்கத்தின் தந்தை பேடன் பவலின் திருவுருவச்சிலைக்கு கழுத்துப்பட்டி அணிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, ஒரு லட்சம் மரநடுகை நிகழ்வும் இடம் பெற்றது.

இந்நிகழ்விற்கு அதிதிகளாக 231 வது படைப்பிரிவின் பிறிக்கேடியர் பிரதீப் கமகே, மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார், மாவட்ட சாரணிய ஆணையாளர் வி.பிரதீபன் மற்றும் கல்விமான்கள், சாரணிய இயக்கத்தின் முக்கியஸ்த்தர்கள் உள்ளிட்ட  சாரணிய மாணவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

















  

SHARE

Author: verified_user

0 Comments: