31 Dec 2020

புத்தாண்டு காலத்தில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு மட்டு அரச அதிபர் வேண்டுகோள்.

SHARE

புத்தாண்டு காலத்தில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு மட்டு அரச அதிபர் வேண்டுகோள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது மிக வேகமாக பரவி வருகின்ற கொரோனா தொற்று காரணமாக மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கணபதிப்பிள்ளை கருணாகரன் கருத்து தெரிவித்தார்

புத்தாண்டு அதன்பின் பொங்கல் பண்டிகை என தொடர்ச்சியாக பண்டிகைகள் வருவதனால் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்புடன் செயற்பட்டு  நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற கொரோனாவில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக மக்களை மிகவும் அவதானத்துடன் செயற்படும்படி அரசாங்க அதிபர் வேண்டுகோள் விடுத்தார்.   

எனவே மக்கள் இவ் விசேட பண்டிகை காலங்களில் ஆலயங்கள் தேவாலயங்களுக்குச் செல்வதை தவிர்த்து வீட்டிலிருந்தவாறே தத்தமது குடும்பத்தாருடன் மத வழிபாடுகளில் ஈடுபடுமாறும் அவசர தேவைகளுக்காக மாத்திரம் வெளியில் செல்லலாம் எனவும் அவ்வாறு செல்லும் போது கண்டிப்பாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றல் வேண்டும் எனவும் அவ்வாறு சுகாதார நடைமுறைகளை அலட்சியம் செய்பவர்களை அவதானிப்பதற்கு பொலிஸ் விசேட குழுவினருடன் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இந் நடைமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

பண்டிகைக்காலங்களில் இவ்வாறான வீணான  சட்ட நடவடிக்கைகளை தவிர்ப்பதற்காக மக்கள் பூரணமான ஒத்துழைப்பை தந்துதவுமாறும் கேட்டுக்கொண்டார். பண்டிகை காலங்களில் உறவினர் வீடுகளுக்குச் செல்வதை தவிர்க்குமாறும் இதன்போது குறிப்பிட்டார். இம்முறை எளிமையான முறையில் பண்டிகைகளை பொதுமக்கள் கொண்டாடுவது தான் கொரோனா தொற்றை  குறைத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும் என சுகாதார துறையினர் மக்களுக்கு தொடர்ச்சியாக ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

 கொரோனா தொற்றினை நமது இலங்கையில் இருந்து இல்லாது ஒழிப்பதற்கு ஒவ்வொரு தனி மனிதனும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி விரைவில் நமது நாட்டை கொரோனா அற்ற நாடாக மாற்றி இயல்பு வாழ்க்கையை வாழ்வதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பை வழங்குவது அவசியமாகும்.



SHARE

Author: verified_user

0 Comments: