22 Dec 2020

துறைநீலாவணையில் மின்சாரத்தில் சிக்குண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு.

SHARE

துறைநீலாவணையில் மின்சாரத்தில் சிக்குண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணையில் திங்கட்கிழமை(21) மாலை 4.30 மணியளவில் வீதியால் பயணித்த ஒருவர் மின்சாரத்தில் சிக்குண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் துறைநீலாவணை 7 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த  நான்கு பிள்ளைகளின் தந்தையான முருகேசு புலேந்திரன்(வயது-61) என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர்  இரும்புக்கத்தியை (கொழுக்கு கத்தியுடன்) வீதியால் எடுத்துச்செல்லும்போது  வீதியின் அருகாமையில் உள்ள மின்மாற்றியின் உயரழுத்த மின்சாரக்கம்பியில் கொழுக்கு கத்தியானது தவறுதலாக மின்சாரத்தில் பட்டுள்ளது. இதனால் குறித்த நபர் மின்சாரத்தால் தாக்கப்பட்டு வீதியில் இழுத்து வீசப்பட்டுள்ளார்.

இதனைக் கண்ணுற்ற பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் மின்சாரத்தால் தாக்கப்பட்ட நபரை கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச ;செல்லும் போது இடைவழியில் மின்சாரம் தாக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தால் துறைநீலாவணையில் சுமார் 20 நிமிடம் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றார்கள்.

இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.





SHARE

Author: verified_user

0 Comments: