8 Dec 2020

பிள்ளையான் மீதான விசாரணை ஒத்திவைப்பு.

SHARE

பிள்ளையான் மீதான விசாரணை ஒத்திவைப்பு.மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான  பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திகாந்தன் மீதான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எஸ்.சூசைதாசன் முன்னிலையில் செவ்வாய்கிழமை (08) எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த 2005.12.25 ஆம் திகதி அன்று மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக பிள்ளையான் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கபட்டிருந்த நிலையில் கடந்த மாதம் பிணையில் விடுதலை செய்யப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.












SHARE

Author: verified_user

0 Comments: