17 Dec 2020

படைப்புழுக்களின் தாக்கத்தினால் கிராம மக்களின் சோளச் செய்கை முற்றாகப் பாதிப்பு.

SHARE

படைப்புழுக்களின் தாக்கத்தினால் கிராம மக்களின் சோளச் செய்கை முற்றாகப் பாதிப்பு.

மீண்டும் படைப்புழுக்களின் தாக்கத்தினால் கிராம மக்களின் சோளச் செய்கை முற்றாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு மாவட்டம் ஆலங்குளம் கிராம விவசாய மக்கள் தெரிவிக்கின்றனர்.

அந்தக் கிராமத்தில் விவசாயிகளால் தங்களது குடியிருப்பு நிலங்களில் செய்கை பண்ணப்பட்ட சுமார் 150 ஏக்கர் பரப்பளவிலாள சோளச் செய்கையில் படைப்புழுத் தாக்கம் ஏற்பட்டு சோளம் செய்கை அழிவை எதிர்கொண்டிருப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

சோளம் பயிர்கள் சிறந்த வீரியத்துடன் வளர்ந்து வரும்போது படைப்புழுக்களின் தாக்கம் அழிவை ஏற்படுத்தியிருப்பது தங்களது வாழ்வாதாரத்தில் பெரும் அடி விழுந்திருப்பதாக கிராம மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

வறுமை நிலையிலுள்ள இந்தக் கிராம மக்கள் தாங்கள் இந்த அழிவிலிருந்து மீள்வதற்கு இழப்பீட்டை எதிர்பார்த்திருப்பதாகவும் மேலும் தெரிவித்தனர்.









SHARE

Author: verified_user

0 Comments: