11 Dec 2020

குச்சவெளி விவசாய காணிகளில் பிரவேசிப்பதற்கு தொல்பெருள் திணைக்களத்திற்கு விடுக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு 2021 பெப்ரவரி மாதம் 3ம் திகதி வரை நீடிக்கபட்டுள்ளது.

SHARE

(ராஜ்)

குச்சவெளி விவசாய காணிகளில் பிரவேசிப்பதற்கு தொல்பெருள் திணைக்களத்திற்கு விடுக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு 2021 பெப்ரவரி மாதம் 3ம் திகதி வரை நீடிக்கபட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று 11ம் திகதி திருகோணமலை மேல் நீதி மன்றத்தில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக் கொண்ட போது மேற்கண்டவாறு இடைக்கால தடை உத்தரவு நீடிக்கபட்டது.

இவ்வழக்கில் வழக்காளிகள் சார்பாக சட்டத்தரணிய கேசவன் சயந்தன் மற்றும் பிரசாந்தினி உதயகுமார் ஆகியோர் ஆஜராகி இருந்தார்

இதன் போது தொல்பொருள் திணைக்களம் சார்பாக ஆஜராகியவர்கள் இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறும் விவசாயிகளை காணிகளுக்குள் செல்ல தடை செய்யுமாறு  கோரியிருந்தார்கள.;

எனினும் அதனை வழக்காளிகள் ஏற்றுக் கொள்ளவில்லை மேலும் தொல்பொருள் அடையாளங்கள் உள்ள இடத்தை தவிர ஏனைய இடங்களை விடுவிக்க தாம் தயாராக இருப்பதாக அரச தரப்பினர் கூறினர்.

அதற்கு இனங்க இந்த இணக்கப்பாட்டுடன் கூடிய தீர்மானம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ம் திகதி நடைபெறவுள்ள வழக்கின் போது ஆராயப்படும் என காணி உரிமையாளர்கள் சாரபான  சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
SHARE

Author: verified_user

0 Comments: