22 Nov 2020

நாளை பாடசாலைகள் ஆரம்பம் - காத்தான்குடி சுகாதார வைத்திய அலுவலகத்தில் பாடசாலை அதிபர்களுடனான கலந்துரையாடல்.

SHARE

நாளை பாடசாலைகள் ஆரம்பம் - காத்தான்குடி சுகாதார வைத்திய அலுவலகத்தில் பாடசாலை அதிபர்களுடனான கலந்துரையாடல்.

மட்டக்களப்பு காத்தான்குடி சுகாதார வைத்திய அலுவலகத்தில் பாடசாலை அதிபர்களுடனான கலந்துiராயடல் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (22) இடம் பெற்றது.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஆசாத் ஹசன் தலைமையில் இடம் பெற்ற இந்தக் கலந்துரையதடலில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர், காத்தான்குடி கோட்டக் கல்விப்பணிப்பாளர் எம்.எம்.கலாவுதீன், காத்தான்குடி மேற் பார்வை பொதுச் சுகாதர பரிசோதகர் ஏ.எல்.எம்.பசீர் உட்பட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பாடசாலைகளின் அதிபர்கள் அரபுல்லூரியின் அதிபர் நிருவாகிககள் கலந்து கொண்டனர்.

இதன் போது பாடசாலைகள் திறக்கும் பட்சத்தில் நடந்து கொள்ள வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பாக பாடசாலை அதிபர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சுகாதார பாதுகாப்பு அவர்கள் நடந்து கொள்ள வேண்டிய சுகாதார நடைமுறைகள் பற்றியும் இதன் போது விளக்கி கூறப்பட்டன.

கொவிட் 19 கொரோனா தொடர்பாகவும் இதன் போது விழிப்பூட்டப்பட்டதுடன் டெங்கு வராமல் தடுப்பதற்காக பாடசாலையையும் அதன் சுற்றுப்புற சூழலையும் துப்பரவாக வைத்திருப்பது தொடர்பிலும் இங்கு அறிவூட்டப்பட்டது.















SHARE

Author: verified_user

0 Comments: