30 Nov 2020

கிழக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று.

SHARE

கிழக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று.

கிழக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் திங்கட்கிழமை (30) தெரிவித்தார்.

அக்கரைப்பற்றில் 68 நபர்களிடம் எடுக்கப்பட்ட பீ சீ ஆர் பரிசோதனையில் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் திருக்கோவிலில் ஒருவருமாக 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் கல்முனை அக்கரைப்பற்று பகுதியல் இதுவரையில் 86 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கிழக்கு மாகாணத்தில் இதுவரை 200 பேர் மொத்தமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.



SHARE

Author: verified_user

0 Comments: