மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் இணைத் தலைவராக பிள்ளையான் நியமனம்.
பிள்ளையான் எனப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் செவ்வாய்க்கிழமை (22) பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் மட்டக்களப்பு மாவட்டத்துக்குரிய மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவராக பதவியை பொறுப்பேற்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கடந்த 2015 ஒக்டோபர் 11 திகதி கைது செய்யப்பட்டு 4 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிக்கின்ற இந்நிலையில், முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் நடந்து முடிந்த பொது தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்க்கு தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment