18 Sept 2020

தனது 40 நாள் குழந்தையை கழுத்து நெரித்து கொலை செய்த தாய்க்கு 14 நாள் விளக்க மறியல் கிணற்றிலிருந்து சடலம் மீட்பு!

SHARE

தனது  40 நாள் குழந்தையை கழுத்து நெரித்து கொலை செய்த தாய்க்கு 14 நாள் விளக்க மறியல் கிணற்றிலிருந்து சடலம் மீட்பு!

தான் பெற்ற 40 நாள் குழந்தையை சிறிய துணியொன்றினால் கழுத்தை நெரித்து கொலை செய்த தாயை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீத வான் நீதிமன்ற நீதிபதி ஏ.சீ.றிஸவான் வியாழக்கிழமை (17) மாலை உத்தரவிட்டார்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வன்னியார் வீதியில் உள்ள வீடு ஒன்றின் கிணற்றில் இருந்து 40 நாள் சிசு ஒன்று உயிரிழந்த நிலையில் நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். பிறந்து நாற்பது நாள் கொண்ட பெண் பிள்ளையான கோஷனி என்ற சிசுவே இவ்வாறு சடலமாக மீட்டகப்பட்டுள்ளது.

இதனையடுத்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ஹெட்டியாராச்சியின் வழிகாட்டலில் பொலிஸ்; நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.முஹம்மட் தலைமையிலான பொலிசார் குறித்த குழந்தையின் தாயைக் கைது செய்து  விசாரணைகளை மேற்கொண்டபோது தானே தனது குழந்தையை தானே  கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது 14 நாள் விளக்க மறியல்  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தலைமைய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.






SHARE

Author: verified_user

0 Comments: