அரச சேவை ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதிய மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுச் சங்கத்தின் 19 வது பொதுக்கூட்டம் மட்டக்களப்பில் நடைபெற்றது.
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுச் சங்கத்தின் தலைவர் எஸ் .சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற சங்கத்தின் 19 வது பொதுக்கூட்டத்தில் பிரதம அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி. வாசுதேவன் , சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலக ஓய்வூதியர் ஒழுங்கு இணைப்பாளர் கே .புவீந்திரராசா ஆகியோர் கலந்துகொண்டனர் .
இன்று நடைபெற்ற மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுச் சங்கத்தின் 19 வது பொதுக்கூட்டத்தில் கடந்தகால கூட்ட அறிக்கை , அரச சேவை ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தினால் கோட்டுக் கொல்லப்பட்ட பிரேரணை தொடர்பான அறிக்கை ,மற்றும் 2020,2021 ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை தெரிவு இடம்பெற்றது .அரச சேவை ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதிய மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுச் சங்கத்தின் 19 வது பொதுக்கூட்டம் மட்டக்களப்பில் நடைபெற்றது.
0 Comments:
Post a Comment