28 May 2020

மட்டக்களப்பு நெடியமடு கிராமத்தில் காட்டுயானைகள் ஊடுருவி தென்னை மரங்களை அழித்து துவசம் செய்துள்ளது.

SHARE
மட்டக்களப்பு நெடியமடு கிராமத்தில் காட்டுயானைகள் ஊடுருவி தென்னை மரங்களை அழித்து துவசம் செய்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள   நெடியமடு - களிக்குளம்  கிராமங்களில்  புதன்கிழமை அதிகாலை (27  காட்டுயானைகள்  ஊடுருவி அங்குள்ள விவசாயி ஒருவரின் தென்னை மரங்களை அழித்து துவசம் செய்துள்ளது.

இப் பிரதேசத்தில் கடந்த ஓரிரு வாரமாக காட்டுயானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாகவும், மாலையில் 6 மணிக்கே காட்டோரங்களில் யானைகள் வந்து நடமாடுவதாகவும் இக் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை கவனத்தில் எடுத்து யானைகளை பெரும் காடுகளுக்குள் துரத்தி, தமக்கு பாதுகாப்பை வழங்குமாறும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


SHARE

Author: verified_user

0 Comments: