மட்டக்களப்பு நெடியமடு கிராமத்தில் காட்டுயானைகள் ஊடுருவி தென்னை மரங்களை அழித்து துவசம் செய்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள நெடியமடு - களிக்குளம் கிராமங்களில் புதன்கிழமை அதிகாலை (27 காட்டுயானைகள் ஊடுருவி அங்குள்ள விவசாயி ஒருவரின் தென்னை மரங்களை அழித்து துவசம் செய்துள்ளது.
இப் பிரதேசத்தில் கடந்த ஓரிரு வாரமாக காட்டுயானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாகவும், மாலையில் 6 மணிக்கே காட்டோரங்களில் யானைகள் வந்து நடமாடுவதாகவும் இக் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை கவனத்தில் எடுத்து யானைகளை பெரும் காடுகளுக்குள் துரத்தி, தமக்கு பாதுகாப்பை வழங்குமாறும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
0 Comments:
Post a Comment