7 May 2020

திருப்பழுகாமம் சிவன் ஆலய பரிபாலன சபையினரால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.

SHARE
திருப்பழுகாமம் சிவன் ஆலய பரிபாலன சபையினரால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனோ வைரஸின் தாக்கத்தினால் மட்டக்களப்பு மாவட்ட மக்களும் வருமானமிழந்து, அனைத்து தொழில்களும் இஸ்த்தம்பிதமடைந்த நிலையில்  வாழ்ந்து வருகின்றார்கள். தமது ஜீவநோபாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ள மக்களின் நிலமையினைக் கருத்திற் கொண்டு அரசாங்கமும், தன்னார்வ தொண்டர்களும் தங்களால் இயன்ற உதவிகளை நல்கி வருகின்றனர்


இந்நிலையில் திருப்பழுகாமம் சிவன் ஆலய அறங்காவலர்சபை மற்றும் திருப்பணிச் சபையினரின் ஏற்பாட்டில் தட்சணேஸ்வரி குணரெட்ணம், சதாசிவம் பாக்கியராஜா(லண்டன்)

இவர்களின் அனுசரணையுடன் கிராம உத்தியோகஸ்தரின் சிபாரிசுடன் 53 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) ஆலயத்தில் வைத்து பொது மக்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.










SHARE

Author: verified_user

0 Comments: