வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கு பிரதேச சபை உறுப்பினர் வினோராஜ் தொடர்ந்து உதவிக்கரம்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையினால் தொழிலிழந்து வாழ்ந்து வரும் மக்களுக்கு பலரும் தமது உதவிக்கரங்களை நீட்டி வருகின்றனர். இந்நிலையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினரும், சமூக சேவையாளருமான மே.வினோராஜ் வழங்கிவரும் உதவியின் மற்றுமொரு கட்டம் மட்டக்களப்பு மாவட்டம் போரதிவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட எல்லைப்புறக் கிராமங்களில் வாழும் மக்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தார்.
இதன்போது போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment