14 Apr 2020

விசேட பொருளாதார மத்திய நிலையம் திறந்து வைத்து, மடக்களப்பு மாவட்ட விவசாயிகளின் விளை பொருட்களை அரசாங்கம் கொள்வனவு.

SHARE
விசேட பொருளாதார மத்திய நிலையம் திறந்து வைத்து, மடக்களப்பு மாவட்ட விவசாயிகளின் விளை பொருட்களை அரசாங்கம் கொள்வனவு.
கொரோனா பீதியின் காரணமாக மட்டக்களப்பு மாவட்டமும் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தின் கீழ் முடங்கியிருக்கின்ற இந்நிலையில மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாய விளைபொருட்களை விற்பனை செய்ய முடியதா நிலைக்கு மாவட்ட விவாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் களுதாவளையில் நிருமாணிக்கப்பட்டுள்ள விசேட பொருளாதார மத்திய நிலையம் இதுவரையில் திறக்கப்படாமல் இருந்து வந்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, மாவட்ட விவசாயிகளின் விளைபொருட்களை தகுந்த முறையில் தற்போதைய காலகட்டத்தில் சந்தைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்குடன் குறித்த விசேட பொருளாதார மத்திய நிலையத்தை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவின் தலைமையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம், மற்றும் விவசாய அமைப்புக்கள், விவசாயிகளின் ஒத்துழைப்புடன் செவ்வாய்கிழமை (14) காலை 07.00 மணியளவில் திறந்து வைக்ககப்பட்டு அப்பகுதி விவசாயிகளின் விளைபொருட்களை அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது. 

இதனால் அப்பகுதி விவசாயிகளுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் தமது விளை பொருட்களை விற்பனை செய்யவும், வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்யவும் முடியாதிருந்த இந்த இக்கட்டான காலகட்டத்தில் தமது கிராமத்தில் அமைந்தள்ள விசேட பொருளாதார நிலையத்தை திறந்து வைத்து தமது விளைபொருட்களை அரசாங்கம் கொள்வனது செய்வதானது தமக்கு மிகுந்த சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இச்செயற்பாடு தொடர்ந்து இடம்பெற வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதன்போது கத்தரிக்காய் (ஊதா) ஒருகிலோ 90 ரூபாவுக்கும், கத்தரிக்காய் (வெள்ளை) ஒரு கிலோ 75 ரூபாவுக்கும், வெண்டி ஒரு கிலோ 30 ரூபாவுக்கும், மிளகாய் பி.சி 1 ஒருகிலோ 120 ரூபாவுக்கும், பயற்றை ஒருகிலோ 30 ரூபாவுக்கும், பாகற்காய் ஒருகிலோ 70 ரூபாவுக்கும், நாடங்காய் ஒரு கிலோ 30 ரூபாவுக்கும், பீற்றூட் ஒரு கிலோ 80 ரூபாவுக்கும், இதன்போது அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்துள்ளது.


இப்பிரதேசத்தில் மரக்கறிகளை உற்பத்தி செய்யும் விவசாயிகள் அதிகமாகவுள்ளனர். இதன் காரணமாக அவர்களின் விளை பொருட்களை மட்டக்களப்பு மாவட்ட செயலகம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தினூடாக அவற்றைக் கொள்வனவு செய்துள்ளோம். இது ஏற்கனவே பொருளாதார மத்திய நிலையமாக நிறுவப்பட்டு அது நடைமுறைப் படுத்தப்படாமல் இருந்து வந்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில இந்த இடத்தில் நாங்கள் இச்செயற்பாட்டை ஆரம்பித்துள்ளோம். இம்மத்திய நிலையம் எந்த நோக்கத்திற்கு அமைக்கப்பட்டதோ அது தற்போது நிறைவேறியுள்ளது. இப்பிரதேச விவசாயிகள், மிளகாய், பயற்றை, வெண்டி, கத்தரி, பீர்க்கு, நாடை, பாகல், பீற்றூட், உள்ளிட்ட பல பொருட்களை நாளாந்தம் அதிகளவு உற்பத்தி செய்து வருகின்றார்கள். இப்பொருட்களை நாங்கள் கொள்வனவு செய்து மட்டக்களப்பு மாவட்டத்திலிருக்கின்ற 14 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும்,  இதனை நாங்கள் அனுப்பி அங்குள்ள நடமாடும் வியாபாரிகளுடாக மக்களுக்கு நியாய விலையில் விற்பனை செய்யப்படவுள்ளன. இச்செயற்பாடு இன்றிலிருந்து தொடர்ந்து மேற்கொள்ளப்டும். என  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா இதன்போது தெரிவித்தார்.

இவ்விசேட பொருளாதார மத்திய நிலையம் மத்திய அரசினால் 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நிருமாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.























SHARE

Author: verified_user

0 Comments: