(துசா)
வரலாற்று சாதனை படைத்த அரசடித்தீவு பாடசாலை.
வரலாற்று சாதனை படைத்த அரசடித்தீவு பாடசாலை.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் அண்மையில் வெளிவந்த கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் வரலாற்று சாதனையை பதிவாக்கியுள்ளது.
குறித்த பாடசாலையில் இருந்து தோற்றிய புலேந்திரராசா கிரோசன் என்ற மாணவன் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்று இவ்வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளான்.
மண்முனை தென்மேற்கு கோட்டத்தில் கடந்த காலங்களில் 8ஏ சித்திகளே பெறப்பட்டிருந்த நிலையில், கடந்த வருடம் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப்பரீட்சை பெறுபேறு அண்மையில் வெளியாகியதன் அடிப்படையில் 9ஏ சித்திகளைப் பெற்று கோட்ட வரலாற்றிலும், பாடசாலை வரலாற்றிலும் முதன்முறையாக இம்மாணவன் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment