29 Apr 2020

வசதிகளற்ற நிலையிலும்; சாதித்த மட்டு.மேற்கு பருத்திச்சேனை மாணவன்.

SHARE
(துசா) 

வசதிகளற்ற நிலையிலும்; சாதித்த மட்டு.மேற்கு பருத்திச்சேனை மாணவன்.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கன்னன்குடா மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் 9ஏ சித்திகளைப் பெற்று பருத்திச்சேனை கிராமத்தினைச் சேர்ந்த மாணவன் சாதனையை நிலைநாட்டியுள்ளான்.

பருத்திச்சேனை கிராமத்தினைச் சேர்ந்த மிலக்ஷன் என்ற மாணவனே இச்சாதனையை புரிந்துள்ளார். தனது கிராமத்தில் இருந்து நாளாந்தம் 4 கிலோமீற்றருக்கு மேல் பயணம் செய்து, வசதிவாய்ப்புக்கள் மிகவும் குறைவாக உள்ள கிராமத்தில் இருந்து இச்சாதனைப் புரியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்மாணவன் போன்ற மாணவர்களின் சாதனை, அடுத்துவரும் மாணவர் சமூகத்திற்கு மிகுந்த எடுத்துக்காட்டுமாகும். இதற்காக உழைத்து நின்ற ஆசிரியர்கள், அதிபர், வலய ஆசிரிய ஆலோசகர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள், வலயக்கல்விப் பணிப்பாளர் ஆகியோரும் குறித்த மாணவன் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.

SHARE

Author: verified_user

0 Comments: