14 Mar 2020

இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பத்தாக அதிகரித்தது- video

SHARE
இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளது.
இத்தாலியிலிருந்து வருகை தந்த 56 வயது பெண்ணுக்கும் அவரது உறவினரான 17 வயதுடைய ஒருவருக்குமே கொரோனா தொற்று இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
56 வயதான பெண் கடந்த 7 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.அவர் தற்போது ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இலங்கையில் எட்டாவது கொரோனா நோயாளியும் அடையாளம் காணப்பட்டார்.
இலங்கையில் மற்றுமொரு கொரோனா நோயாளியும் இனம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்ச்சு சற்றுமுன்னர் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் இன்றையதினம் மூன்று கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் எட்டாக அதிகரித்துள்ளது.
இன்று அடையாளம் காணப்பட்ட மூவரும் இத்தாலியிலிருந்து வந்தவர்கள் எனவும் 44,43 மற்றும் 42 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

எட்டாவது நபர் கந்தகாடு இடைத்தங்கல் முகாமில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பொலநறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


SHARE

Author: verified_user

0 Comments: