மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கிவைப்பு.
மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு கொரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க இலவசமாக முகக்கவசங்கள் வியாழக்கிழமை (26) வழங்கிவைக்கப்பட்டன.
இதன்போது வெளிக்களத்தில் பொது மக்களுக்கு அத்தியவசிய சேவைகளை வழங்கும்போது இந்த கொரோனா தொற்று நோய் தொடர்பில் உத்தியோகத்தர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதுடன் மக்களை எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்பது தொடர்பில் சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைவாக பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் கருத்துத் தெரிவித்தார்.
இதன்போது வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு முகக்கவசங்களை உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன் வழங்கிவைத்தார்.
0 Comments:
Post a Comment