19 Mar 2020

நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 32 வது ஆண்டு நினைவு தினம்.

SHARE
(ஜதுர்சயன்) 

நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 32 வது ஆண்டு நினைவு தினம்.
நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 32 வது ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை அனுஸ்ட்டிக்கப்பட்டது.  ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு வெல்லாவெளியில் அமைந்துள்ள அவர்களது காரியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனநாயகக் கட்சியின் உப தலைவர் நா.நகுலோஸ், கொள்கை பரப்புச் செயலாளர் க.சாந்தன் மற்றும் மகளிர் உறுப்பினர்கள், பிரதேசங்களின் இணைப்பாளர்கள் உள்ளிட்ட பலருரம் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது அன்னை பூபதியின் உருவப் படத்திற்கு மலர் மாலையை ஜனநாயகக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் க.சாந்தனும், ஈகைச் சுடரினை கட்சியின் உப தலைவர் நா.நகுலோசும், ஏற்றியதுடன் கலந்து கொண்டிருந்தவர்கள் மலரஞ்சலி செலுத்தினர். 

அன்னை பூபதி அவர்கள் 19.03.1988 அன்று தனது உண்ணாநோன்பினை ஆரம்பித்து 19.04.1988 அன்று உயிர் நீத்தார். 

















SHARE

Author: verified_user

0 Comments: